பங்கு வர்த்தகம் பங்குச் சந்தையின் மிக முக்கியமான அங்கமாகும். இங்கு பங்குகள் சில விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க முறையாக விற்பனை செய்யப்படுகிறது.
பங்குச்சந்தை வர்த்தகம் என்பது வர்த்தகர்கள் பங்குகளை வாங்கி விற்கும் இடமாகும். பங்கு வர்த்தகம் பங்குச் சந்தையின் மிக முக்கியமான அங்கமாகும். இங்கு பங்குகள் சில விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க முறையாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்ள முக்கிய பங்குச்சந்தைகள்
1. தேசிய பங்குச்சந்தை ( NSE )
- தேசிய பங்குச்சந்தை ( NSE ), 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956-ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. இந்த பங்குச்சந்தை 1994-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது.
- விக்ரம் லிமாயே இந்த நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
- இந்தியாவில் முதல் முறையாக முழு கணினிமயமாக்கப்பட்ட மின்னணு வர்த்தகத்தை வழங்கிய பங்குச்சந்தை இதுவாகும். மேலும் இதன் முன்னோடியான தொழில்நுட்பம் உயர்ந்த செயல்திறனை உறுதிசெய்து, 3,000 க்கும் மேற்பட்ட வீசட் ( VAST ) டெர்மினல்களை ஆதரிக்கிறது.
- இதன் மூலம் தேசிய பங்கு சந்தை இந்தியாவின் மிகப்பெரிய தனியார் பரந்த பகுதி வலையமைப்பை கொண்டதாக விளங்குகிறது.
2. மும்பை பங்குச் சந்தை ( BSE )
- மும்பை பங்குச் சந்தை என்று அழைக்கப்படும் இந்த பங்குச்சந்தை ஜூலை 9, 1875-ல் தொடங்கப்பட்டது. இதுவே ஆசியாவின் முதல் பங்குச் சந்தை ஆகும்.
- 1875 ஆம் ஆண்டில், பிரபல தொழிலதிபர் பிரோம்சந்த் ராய்சந்த் அண்டைய பங்கு மற்றும் பங்குதாரர்கள் அமைப்பை நிறுவினார். பின்னர் அது மும்பை பங்குச்சந்தை என பெயர் மாற்றப்பட்டது.
- இந்த பங்குச்சந்தை 6 மைக்ரோ வினாடி சராசரி வர்த்தக வேகத்துடன் செயல்படும் உலகின் வேகமான பரிமாற்ற சந்தையாகும்.
- இந்த பங்குச்சந்தையின் இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகான் ஆவார். மேலும் 5000 நிறுவனங்கள் இந்த பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
3. கொல்கத்தா பங்குச்சந்தை
- கொல்கத்தா பங்குச்சந்தை ( CSE ), கொல்கத்தாவில் உள்ள லியோன்ஸ் வரம்பில் அமைந்துள்ளது.
- 1908-ல், தொடங்கப்பட்ட இது தெற்காசியாவின் இரண்டாவது பழமையான பங்குச் சந்தை ஆகும். இருப்பினும் இந்த பங்குச்சந்தை, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தால் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
- தற்போது இதன் வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் முன் மேலும் பிற 13 பிராந்திய பங்குச்சந்தைகள் உடன் நிலுவையில் இருக்கிறது.
4. இந்தியா சர்வதேச பங்குச்சந்தை
- இந்தியா சர்வதேச பங்குச்சந்தை, இந்தியாவின் முதல் சர்வதேச பங்குச்சந்தை ஆகும். இது குஜராத்தில் உள்ள GIFT நகரத்தின் சர்வதேச நிதிச் சேவை மையத்தில் IFC அமைந்துள்ளது.
- மும்பை பங்குச்சந்தையின் துணை நிறுவனமான இது ஜனவரி 9, 2017 அன்று தொடங்கப்பட்டது. இதன் வர்த்தக நடவடிக்கைகள் 16 ஜனவரி, 2017 முதல் செயல்பட தொடங்கின. இந்த பங்குச்சந்தை ஒரு நாளைக்கு 22 மணிநேரமும், வாரத்தில் 6 நாட்களும் இயங்குகிறது.
5. பங்குச் சந்தைகளின் ஒழுங்குமுறை
Securities and exchange Board of India ( SEBI )
- இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம். இந்திய பங்குச் சந்தைகளின் ஒழுங்குமுறையை மேற்பார்வை செய்து வருகிறது.
- இந்த வாரியம் 1992-ல் ( செபி சட்டத்தின் கீழ் ) ஒரு சுயாதீன அமைப்பாக உருவாக்கப்பட்டது.
- இது பங்குச் சந்தைகளை ஆய்வு செய்வதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளது. இந்த வாரியம் நிர்வாக கட்டுப்பாட்டு அம்சங்களுடன் சந்தையின் செயல்பாடுகள் மற்றும் நிறுவன கட்டமைப்பை மதிப்பாய்வு செய்கிறது.
இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் பங்கு
Securities and exchange Board of India ( SEBI )
- முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு உதவும் நியாயமான மற்றும் சமமான சந்தையை உறுதி செய்கிறது.
- பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) சட்டம், 1956 இன் கீழ் வடிவமைக்கப்பட்ட விதிகளின்படி இந்த பரிவர்த்தனை அமைப்பின் இணக்கம் மற்றும் அதன் நடைமுறைகள் அமைந்துள்ளன.
- இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளின் படி பங்குச்சந்தைகள் செயல்படுவதை உறுதி செய்கிறது.
COMMENTS