Trading styles
நம்மை அறிந்தால் நம் வர்த்தகத்தை அறியலாம்
- முதலில் நாம் நம்மை புரிந்து கொள்ளவேண்டும் என்பது வாழ்க்கையில் எல்லா விஷயத்திற்கும் பொருந்தும்.
- அதேபோல் பங்கு வர்த்தகத்திலும் நாம் யார், நம் வசதி என்ன, நம் பணம் லாபம் என்ன, நம் மன உறுதி என்ன போன்ற விஷயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
- ஏனென்றால் அதிகம் " டென்ஷன்" Tension ஆகக்கூடிய ஒருவருக்கு தின வர்த்தகம் Day Trading கண்டிப்பாக பொருந்தாது.
- அதேபோல் பொறுமை இல்லாதவர்களுக்கு நீண்ட நாள் முதலீடு Long Term Investments வகைகள் துளியும் பொருந்தாது.
- இதுபோல் ஒவ்வொரு மனிதருடைய மனநிலையை பொறுத்து தான் அவர் தொழிலை Profession தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதனால் உங்களுடைய மனநிலையையும் பணநிலையையும் சரியாக புரிந்து கொள்ளாமல் பங்குவர்த்தகத்தில் ஈடுபடாதீங்க.
Mindset is Major Role in the Stock Market |
நாம் எவ்வளவு தொகையை வைத்துள்ளோம் அதில் எவ்வளவு தொகையை பங்குவர்த்தகத்திற்கு பயன்படுத்த போகின்றோம் ?
1. அதேபோல் எவ்வளவு லாபம் Profit நமக்கு கிடைத்தால் போதுமானது ?
2. எந்த அளவுக்கு நஷ்டத்தை Loss நம்மால் தாங்க முடியும் ?
- போன்ற எல்லா கேள்விகளுக்கும் நமக்கு நாமே கேட்டுக் கொண்டு ஒரு சரியான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு அதற்குப் பின்தான் பங்குவர்த்தகத்தில் நுழைய வேண்டும்.
- பங்குவர்த்தகத்தில் நுழைவதற்கு முன்னால் நம் இலக்குகளில் இருந்து மாறாமல் ஒழுக்கத்துடன் அதை பின்பற்ற வேண்டும். எந்த அளவிற்கு நம்மை நாமே புரிந்து கொள்கிறோமோ அதை பொறுத்து எம்மாதிரியான வர்த்தகத்தை நாம் செய்ய வேண்டும் என்பதை தானாகவே புரிந்து கொள்ளலாம்.
குழப்பமில்லா மனநிலை
Mindset is Major Role in the Stock Market |
1. இன்னும் சில பங்குகளை இவ்விலையில் வாங்கலாமா ?
2. பாதி பங்குகளை மட்டும் விற்று விடலாமா ?
3. இறங்கிய விலை கண்டிப்பாக திரும்பவும் ஏறிவிடும் ?
4. லாபத்தை வெளியே எடுக்கலாமா வேண்டாமா ?
5. இன்னும் கொஞ்சம் விலை உயரட்டும் ?
6. சந்தை ஏறுமா ? இறங்குமா ?
பங்கு சந்தையில் பெரும் பங்கு வகிப்பது வர்த்தகர்களின் மனநிலை தான்.
- ஏனென்றால் அடிப்படையில் வலிமையாக இருக்கும் ஒரு பங்கானது கீழ்நோக்கி இறங்குவதும், அடிப்படையில் வலுவில்லாத ஒரு பங்கு திடீரென மேல்நோக்கி ஏறுவதும் வர்த்தகர்களின் மனநிலையை பிரதிபலிப்பது தான். அது ஒரு பக்கம் இருந்தாலும், வர்த்தகம் செய்யும் போது நம் மனநிலையானது மிகுந்த கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும்.
- ஏனென்றால் பங்கு வர்த்தகம் ஆனது பலரை பெரிய கோடீஸ்வரர்களாக வளர்த்தும் உள்ளது ஒன்றும் இல்லாதவர்களாக மாறியும் உள்ளது.
- பங்கு வர்த்தகத்தை முறையாக செய்யாமல் அதை விட்டு வெளியேறவும் முடியாமல் அதற்கு அடிமையாகி தங்களுடைய அனைத்து முதலீடுகளையும், மனநிம்மதியையும் தொடர்ந்து இழந்து கொண்டிருப்பவர்களுக்கும் பங்குசந்தையில் உண்டு.
COMMENTS