எதிர்மறை மனநிலையானது ஒருவரை நிதானம் இழக்க செய்து யோசனையின்றி எதிர்வினையாற்ற தூண்டுகின்றது. ஆகவே உங்கள் நிதானத்தை இழந்து விடாதீர்கள்.
எளிதில் கோபப்படும், எரிந்துவிழும் மற்றும் விரக்தியான மனிதர்களை நீங்கள் அடிக்கடி பார்க்க நேரிடும். அது உங்கள் சக பணியாளர்களாக, குடும்ப உறுப்பினர்களாக, வாழ்க்கைத் துணைவராக, நண்பராக ஏன் ஒரு புதியவராக கூட இருக்கலாம்.
அவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும், நீங்கள் எப்படி எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது நினைவிருக்கட்டும்.
எதிர்மறை நபர்கள் உங்களை குறுக்கிடும் போது பின்வரும் வழிகளை கடைபிடியுங்கள்:
1. Don't Take it Personally / அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம்
- ஒருவரின் அப்போதைய நிலை என்ன என்பது நமக்கு முழுமையாக தெரியாது. அவர் பெரிய கவலையிலோ, இயலாமையிலோ, இழப்புலோ அல்லது வலியிலோ இருக்கலாம் என்பதை உணருங்கள்.
- அவரின் நண்பர் உடல்நலமின்றி இருக்கலாம் அல்லது அவரது இணையர் பிரிந்து விட்டிருக்கலாம். இப்படி ஏதாவது சூழ்நிலை இருக்கலாம். அதன் வெளிப்பாடாக அவர்கள் எதிர்மறையாக கொஞ்சம் கடினமான உங்களிடம் நடந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் காரணமாக இருக்க மாட்டீர்கள். இதை புரிந்துகொண்டால் அவர்களை கையாள்வது சுலபம்.
2. Stay Patient To Create Space / பொறுமையாய் இருங்கள்
- எதிர்மறை மனநிலையானது ஒருவரை நிதானம் இழக்க செய்து யோசனையின்றி எதிர்வினையாற்ற தூண்டுகின்றது. ஆகவே உங்கள் நிதானத்தை இழந்து விடாதீர்கள். அதற்கு பதிலாக, நன்றாக ஆழமாக இழுத்து மூச்சு விடுங்கள், எதிர்வினையாற்றும், முன் உங்களை நிதானப்படுத்துங்கள்.
- உதாரணத்திற்கு, கோபத்தை தூண்டும் இ-மெயில் அல்லது செய்தி வந்தால் உடனடியாக நீங்கள் பதில் அளிக்க வேண்டாம். அதைப் புரிந்து ஏற்றுக் கொள்ள அடுத்த நாள் வரை காத்திருந்து, தெளிந்த சிந்தனையுடன் சரியான பதில் அளிக்கலாம்.
3. Be Peaceful & Simple / அமைதியாகவும் எளிமையாகவும் இருங்கள்
- நேர்மறையோ எதிர்மறையோ, ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் எளிதாக மற்றவர்களையும் தொற்றிக் கொள்கின்றன. மற்றவர்களுடன் நீங்கள் கலந்து பழகுவது அவர்களை உற்சாகம் செய்யவும் வைக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
- அவர்களை மகிழ்விக்க நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய தேவையில்லை. புன் சிரிப்புடன் அமைதியாக இருந்தாலே போதுமானது.
4. Emotions Are Temporary / உணர்ச்சிகள் தற்காலிகமானவை
- உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகள் - எதுவும் நிரந்தரமல்ல.
- உங்கள் உணர்ச்சிகளை அல்லது எண்ணங்களை கொஞ்சம் நேரம் கவனித்தாலே போதும், அவற்றின் வாழும் இயல்பை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
- உதாரணத்திற்கு, வானத்தில் கடந்து செல்லும் மேகங்களை கூறலாம், இதுவும் கடந்து போகும்.
5. Proceed With Openness / திறந்த நிலையில் தொடரவும்
- எதிர்மறை மனநிலை உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி வந்துபோகலாம். சில நேரங்களில் இதற்கு மற்றவர்கள் காரணமாக இருப்பார்கள். வேறு சந்தர்ப்பங்களில் அத்தகைய எண்ணம் உங்களுக்குள் இருந்தே வெளிப்படலாம். ஆகவே, இத்தகைய எதிர்மறை மனநிலையை மாற்ற சூழ்நிலைகளை அவற்றின் போக்கில் புரிந்துகொள்ளுங்கள்.
- இவற்றை நியாயப்படுத்துவதற்கு பதிலாக, விழிப்புடன் இருந்து சூழ்நிலைக்கு சரியான முறையில் செயல்படுங்கள்.
6. Dealing with own Negativity / சொந்த எதிர்மறையுடன் கையாள்வது
- எதையும் பாசிட்டிவாக பார்க்கும் பெரும்பான்மையானவர்கள் கூட சில நேரங்களில் எதிர்மறை எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுகின்றனர். இந்த சூழ்நிலைகளில் எதிர்மறை மன நிலையை மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி சுய விழிப்புணர்வு தான்.
- உங்களிடம் உள்ள எதிர்மறை உணர்வுகளை நீங்கள் உணரும் கணமே, அதுபற்றி விழிப்புணர்வும் உங்களுக்கு ஏற்பட்டு, என்னலாம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் சுய விருப்பத்துடன் செயல்படுவதற்கான வாய்ப்பை விழிப்புணர்வு உங்களுக்கு அளிக்கும்.
COMMENTS